my thoughts.....

constellation, assimilation, formation and expression of my cerebration!

Wednesday, August 27, 2008

KISS


உன் முத்த சத்தங்கள் படிக்கும் மோகன ராகமே
என் மூச்சை அடைக்கும் பொழுது
உன் முத்தங்கள் படிக்க போகும் மோக ராகம்
என் மூச்சையே அடக்கிவிடக்கூடும் ஜாக்கிரதை!


[...]

Thursday, August 21, 2008

SUPERCAPITALISM



பச்ச பச்ச புல்லைப் பார்த்து பசி எடுத்தது
திங்க திங்க மீண்டும் மீண்டும் பசி எழுந்தது
செரிக்க செரிக்க இன்னும் கொஞ்சம் உடல் பருத்தது
உடல் பெருக்க பெருக்க பசி இன்னும் அதிகரித்தது
தின்ன தின்ன பச்ச யெல்லாம் வெள்ளை ஆனது
பசிக்க பசிக்க புத்தி மேலும் மங்கிப் போனது
மந்த புத்தி மத்த உயிரை திங்கத் தூண்டுது
சிறிய சிறிய உயிரை பயம் கவ்விக் கொண்டது
நடுங்கிப் போன அந்த உயிரை பசி தின்னுவிட்டது
பச்ச பச்ச காடுகூட சுடு காடாய்ப் போனது
மீண்டும் மீண்டும் பசி மட்டும் அடங்க மறுத்தது
நாட்கள் நகர நகர பருத்த உடலும் வாடிவிட்டது
வாடிப் போன உடலில் உயிரும் மங்கிப் போனது
மொட்டக் காடும் எந்தன் உயிரை வாங்கிச் சென்றது


[...]

Tuesday, August 19, 2008

Power of another perspective.....

I don't think I found anything in recent times as fascinating as the theory behind Global Positioning System. I happened to read about this couple weeks ago. My amazement lies in how the power of one more perspective empowers GPS! Without drifting away too much in explaining how GPS works, GPS - the gadget that you keep one of your eyes on while driving - continuously seeks the help of three or more satellites, each of which know where they are revolving around Earth at a given moment, to give you the direction.

GPS gets a first piece of information from one of the satellites - the piece is nothing but how long GPS is away from the known location of the satellite. That basically helps GPS to locate itself at a center of a circle - the circle obviously gets bigger as the distance between the satellite and GPS increases. This is quite analogous to you were walking in the middle of nowhere almost a century ago and someone whom you accosted told you are 50 miles away from one of your known places A. He did not quite help you yet! You have basically at least 150 directions to choose from! - obviously due to your walking in the middle of nowhere. The number of directions are based on the number of arcs of 2 mile each that constitutes the circumference of a 50-mile radius circle. You were dejected and running out of your energy and hoping for one more person on your way to give you more useful direction.

Few more were passing by you saying the same thing - you were 50 miles away from the place A. You were very frustrated and finally decided to start walking in a random direction and luckily a person walking by you who 'd known that you were 35 miles from one of your other known places B. You were starting jumping up in the air as this piece were of immense use. You had to now choose from only two directions! See here how it works. Please also remember here people in the last century had a terrific sense of direction despite their habit of getting lost!

When the first person told how long you were away from A, you could have been on any point onthe circumference of the bigger circle. After the second person told you about your relative position from B, you now could be on one of the two intersecting points. You chose to walk in one of the directions and and try to get a sense of the direction. If you were lucky, you 'd reach home. If you were not, you 'd walk all the way back - some of the milestones like some strange trees or some earthly marks or small mountains 'd help you here! - and walk towards your home. This is obviously better than trying out 150 directions one by one!!

If you were too lucky to have a third person told you how long you were away from one another of your known places C, you 'd have known exactly where you were and saved all your energy! This is exactly the principle behind GPS. Is not amazing how much power another perspective adds - by reducing the possible 150 directions to mere two in the case explained here. Is not it also amazing how simple math behind intersection of two circles could be exploited!

I am amazed beyond the words when realizing the power of another perspective. When I was in India, I had never imagined Idli and Sambar and breakfast were ever separable; I had never imagined you could drive on the right-hand side of the road; I had never imagined you could finish your work sharply by 5'0 clock; I had never imagined my parents are not actually obligated to support my studies; I had never imagined you could apply so much of your knowledge in real life; and so on. How living in another country like US has changed lot of my perspectives and expanded my mind is quite amazing!

When I was watching only Tamil movies few years back, I believed you always have songs in a movie; I believed you always have a hero and a heroine in a movie; I believed a movie is always dramatic and sentimental; I believed a movie always ends happily; I believed a movie should run for 150 to 180 minutes; and so on. I don't need to tell you I don't believe in any of these any more!

Two different perspectives of Stonehedge - one from the very familiar front and another from a rare top

When you learn one more language, your mind gets another perspective too. When i was only speaking Tamil, I had not known you could pretty much reverse the order of subject, verb and object in a sentence; I had not known you could speak with just 26 alphabets; I had not known that scripts could be much less art-like; I had not known you could have more phonetic variations to pa and ka etc; I had not known the same alphabet could sound very different in different words; an so on.

Making a new friend could change a lot in your life. A friend of mine completely changed the way I study and imparted the importance of fundamentals permanently in my mind. Another friend of mine showed me the horizon of knowledge. Another friend of mine showed me what self-confidence is. Another friend of mine showed what street smartness is. Another friend of mine showed what responsibility is. Another one showed what experience is.

Sharing your life with an opposite sex is an ultimate experience in one's life. How an opposite sex could influence you, motivate you and make your life better is unutterable by words! I realized what Love is. I realized what sensitiveness is. I realized what kindness is. I realized what patience is. I realized what an art is. I realized what beauty is.

So, always make new friends; learn one more language; travel to one more country; watch movies of another culture; most importantly be a heterosexual! You will get another perspective in life and position yourself better in this globe. you would not keep wandering in life and end up losing all your energy.

Getting another perspective after all helps you to get a sense of direction in life!


[...]

வெய்யில்



உறங்கியிருந்த குடைகளேன் சிறகை விரித்து முறைக்குது!
அடங்கியிருந்த பாதரசமோ எழுச்சி கொண்டு துள்ளுது!
நனைந்திருந்த நாக்கு ஏன் பாலையாய் வறண்டது!
நிமிர்ந்து நின்ற விழிகளோ நாணம் கொண்டு கூசுது!
தன்மையான தண்ணீர் ஏன் கோபம் கொண்டு கொதிக்குது!
கொடுத்து சிவந்த மரங்களோ இன்னும் தியாகம் செய்யுது!
சுட்டெரிக்கும் சூரியனை சுட மனமேன் துடிக்குது!
மறந்திருந்த மழையின் மீது காதல் மீண்டும் பூத்தது!


[...]

Tuesday, August 12, 2008

சுப்ரமணியபுரம் - ஒரு 'காவி'யம்

சமீபகாலமாக திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தருமபுரி, பழனி, திருவண்ணாமலை என தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்களில் திரைப்படங்கள் எடுத்து வரும் பேரரசுவின் அடுத்த கைவண்ணமோ என சற்றே மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் படத்தலைப்பு! ஆனால், "ஆனந்த விகடன்" நாளிதழில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இத்திரைப்படத்தின் நிழற்படங்கள், படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பினை என்னிடம் ஏற்படுத்தியது.

படம் ஆரம்பித்தவுடன் இருட்டில் நடந்து செல்லும் கால்களாக, பின்னால் நின்றுகொண்டிருக்கும் காவலர்களை திரும்பி பார்க்கும் கழுத்தாக, சிறைக்கதவின் மறுபக்கம் உள்ள உலகைக் காண துடிக்கும் விழிகளாக, சிறைவாசம் முடித்து வெளிவரும் ஒருவனாக பயணிக்கும் காமிராவும் அதன் ஆர்ப்பாட்டமற்ற ஆனால் அழுத்தமான கோணமும் படம் பார்ப்போரின் கவனத்தை உடனே ஈர்க்கிறது.

உலகப் படைப்பாளிகளின் கலைத் தாக்கத்தை தீர்ப்பதில் காதலின் மென்மையும், துரோகத்தால் விளையும் பழி தீர்த்தலின் வன்மையும் கலைமாலையின் ஈரிறுதியாக இருந்து வருகிறது. இவ்விரு இறுதிகளையும் ஒரு புள்ளியில் குவிக்கும் முயற்சியின் விளைவே இந்த 'காவி'யம். நட்பு, காதல், விசுவாசம், துரோகம், வலி என மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் எளிமையான கதையும் சரி, கதை நடக்கும் களமான மதுரையும் சரி, நமக்கு பழக்கப்பட்டதுதான். ஆனால், கதை நடக்கும் காலமும், அங்கு உலவும் மனிதர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் உயிரோட்டம் கொடுத்து உருவாகிய விதமும் மிகப் புதிது; மிக நேர்த்தியானாது; மிக நேர்மையானது.

கதை நிகழும் முப்பதாண்டுகளுக்கு முந்தய கால கட்டத்தை பதிவு செய்ய எடுத்து கொண்ட முயற்சியும் (making), படத்தின் வடிவமைப்பும் (production design) அதில் உள்ளடங்கியுள்ள மதிப்பும் (production value) இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க செய்யும் அம்சங்களில் ஒன்று.

கதை ஆரம்பித்தவுடன் எதிர் வரும் இருவரின் கழுத்துப்பட்டையின் அதிகப்படியான அகலம் தொடங்கி, இலங்கை வானொலியின் செய்தி வாசிப்பாளரின் குரல், நீல நிற ஆவின் பால்ச்சாவடி, solidaire தொலைக்காட்சிப்பெட்டியின் முழு நீள சுவர் விளம்பரம், கதாநாயகியின் "ரெட்ட அன்ன" கழுத்து சங்கிலி, ஒலிப்பெருக்கியில் ஒலிக்கும் எண்பதுகளில் வெளி வந்த திரைப்பட பாடல்கள், படக் கதாநாயகன், படத்தில் சாதரணமாக கடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் ஒரு காட்சியில் "முரட்டுக் காளை" படம் காண கலை அரங்கத்தின் முன் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் என அணைவரின் ஆடை வடிவமைப்பு, வீடுகளின் வாசற்கதவிலுள்ள இரும்பு வேலைப்பாடு, சுவர்களிலுள்ள வண்ணப்பூச்சு மற்றும் வீட்டிலுள்ள அறைகலன்கள், சாலையில் செல்லும் பேருந்து, சிற்றுந்து மற்றும் இரு சக்கர வாகனங்கள், பெட்டிகடைகளில் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் வாகனங்களின் பதிவு எண் வரிசை என படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எண்பதுகளின் அச்சு அசலான மறுபதிப்புக்கள். இந்த உழைப்பை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை!

கதாநாயகன் ஜெய்யின் வெள்ளந்தி கலந்த முன் கோபமும், சசி குமாரின் இறுக்கம் கலந்த ஒட்டுதலின்மையும், நாயகி சுவாதியின் மென்மையான கவிதை தனமான துறுதுறுப்பும், கருப்புவின் எகத்தாளம் கலந்த ஆழமும், சமுத்திரகனியின் சூழ்ச்சி மிகுந்த நயவஞ்சகத்தனமும், அவரது அண்ணனாக வரும் முன்னாள் counselor ன் இயல்பான பாத்திரமும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி படத்தில் வரும் ஒவ்வொருவரும் அவ்வளவு இயல்பாக வந்து செல்கிறார்கள்.

எந்த பாத்திர படைப்பு சிறந்தது என கூறுவது மிகக் கடினம். எனினும், நான் மிகவும் ரசித்து புளங்காகிதம் அடைந்தது கருப்புவின் காசி பாத்திரம் தான். இத்தனை நேரம் ஒரு பூட்டிய வீட்டின் முன் தான் நாம் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டியுள்ளோம் என்பதை அறிகையில் அவர் காட்டும் அவருக்கே உரித்தான முகபாவனையும் சரி, "இவங்க மத்தியில வாழ்றதே பெரிய பொழப்பு தான்!" என ஜெயிடம் எகத்தாளமாக கூறும் போதும் சரி, படத்தின் கடைசி காட்சிகளில் நண்பன் சசிகுமாரை காட்டி கொடுத்த பின் அவருக்கு ஏற்படும் வருத்தம், ஏமாற்றம், பயம், குற்றம், வலி என பல உள்ளுணர்வுகளை, தான் கட்டும் வேகமான நடையிலேயே காட்டும் போதும் சரி, அவர் கஞ்ச கருப்பு இல்லை; கருப்பு குதிரை!

படம் முழுவதும் சுவாதியின் பின் சுற்றிக்கொண்டும், அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டும், பொறுப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தும் அம்மாவிடம் எரிந்து விழுவதையே பதிலாக கொண்டும் திரியும் ஜெய், "நம்ம குல மானத்தையே காப்பாத்திட்டம்மா!" எனக் கூறிக்கொண்டே சுவாதியை சமுத்திரக்கனி இழுத்துக்கொண்டு செல்கையில், தன் நெஞ்சில் கத்தி இறங்குவதற்குமுன்பே தான் உணர்வு பூர்வமாக இறந்து விட்டதை காட்டும் வகையில் அவர் கண்களில் காட்டும் அந்த மிரட்சி, நமக்கு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் ஏற்படுத்தும் சோக அதிர்ச்சி!

சமுத்திரக்கனி அவ்வளவு கன(கு)க்கச்சிதமாக நடித்துள்ளார். ஜெய், சசிகுமாரின் மனதை "தாய புள்ளையா பழகியிருக்கோம்" என நயவஞ்சகமாக கூறி கொலை செய்ய தூண்டி மனதை மாற்றும் போதும் சரி, சுவாதியின் மனதை மாற்றி ஜெய்யை கொல்ல சதி செய்யும் போதும் சரி, மனித உணர்வுகளின் மென்மையை சுரண்டி பின் அந்த உணர்வுகளை தன் சுய ஆதாயத்திற்காக பகடைக்கைகளாக பயன்படுத்தும் அவரது சூதாட்டக்காரத்தனம் மிகவும் ரசிக்கும்படியானது.

படம் முழுவதும் இறுக்கமாகவும், அமைதியாகவும் வரும் சசி குமார் சமுத்திரகனியை முண்டமாக துண்டாக்கிவிட்டு, கருப்புவின் முன் எரிமலையாக குமுறும் போது நடிப்பில் மிளிர்கிறார். சுவாதி, தன் மருளும் விழிகளாலும், சென்னை தண்ணீர் குழாய்களில் வருவது போன்று அவரது இதழோரத்தில் வழியும் மெல்லிய புன்னகையாலும் நம் நெஞ்சை கொள்ளை கொள்கிறார். வாசற் கதவை சாத்திகொண்டே காதலனுக்கு கையசைக்கும் போதும், கண் முன் காதலன் கொல்லப்படும் போது தலையை கையால் அடித்து கொண்டே கதறும் போதும் அருமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

படத்தின் வடிவமைப்பு, பாத்திர படைப்பு, பாத்திரங்களின் நடிப்பு என இந்தப்படத்தின் சிறப்பை பற்றிய வரிசையில் அடுத்த இடம் நிச்சயம் ஒளிப்பதிவாளர் கதிருக்கு தான். படம் நடக்கும் காலத்தையோ, களத்தையோ, கதையின் உயிரோட்டதையோ சற்றும் சிதைக்காமல் காமிராக் கோணங்களிலும், இயற்கையான ஒளி அமைப்பிலுமே படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கூட்டுகிறது. படத்தில் கதாபாத்திரங்களின் மீது கதிரின் காமிரா கொண்டுள்ள அருகாமை, படத்திற்கும், நமக்குமான இடைவெளியை முற்றிலும் குறைத்து விடுகிறது. படத்தின் ஆரம்ப காட்சியில், ஜெய், சுவாதி மற்றும் சசியிநூடே புகுந்து விளையாடும் போது காமிரா படைத்திருப்பது முக்கோண கவிதை! அதே போல் படத்தின் இறுதிக்காட்சியில் கருப்பு சசியை காட்டி கொடுத்து விட்டு, வேகமாக நடையை கட்டி கொண்டே தன் நண்பன் சாகடிக்கப்படுவதை திரும்பி பார்க்கையில், நாம் கருப்புவின் கண்கள் வழியே வெகு தூரத்தில் காண்பது, நான்கைந்து நபர்களின் கைகால் அசைவையே. ஆனால் அந்த காட்சியின் தூர வீச்சு (long shot) அமைக்கப்பட்ட கோணத்தை மட்டும் கொண்டு காட்சியின் வீரியத்தை விளக்கும் கதிரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

அடுத்து படத்தின் பின்னணி இசை. படத்தின் பல காட்சிகளில் 'ராஜ' பாட்டையே நடத்தியுள்ளார். சாராயக்கடையில் வைத்து கஞ்சா கருப்பு, ஜெய்யிடமும் சசியிடமும் தங்கள் நண்பன் சித்தனுக்காக சமுத்திரகனியிடம் சென்று உதவி கேட்டு செல்ல சொல்லும் போது, ஜெய் சமுத்திரகனியை பார்க்க செல்கையில், சுவாதியை பார்க்க கிடைக்கும் சந்தர்ப்பத்தை எண்ணி உள்ளுக்குள் மகிழ்வதை காட்ட அந்த கல்லுக்குள் ஈர பாடலை பின்னணி யாக இசைப்பது 'ராஜா' த்தனம் எனினும் ரசனையனாது. ஜெய் கொல்லப்படுமுன், சுவாதியிடம் பேசிகொண்டிருக்கையில் பின்னணியில் வல்லுரூகளை அலரவிட்டுருப்பது அந்தக் காட்சியின் ஆழத்திற்கு உதவுகிறது. அதே போல், கடைசி காட்சியில், சசி கொல்லப்படும் போது, கருப்புவின் கால்களோடு, பின்னணி இசை போடும் குதியாட்டம் ஜேம்ஸ் வசந்தனின் திறமையை பறை சாற்றுகிறது. 'கண்கள் இரண்டால்' என்ற பாடலும் மிக இனிமை.

கஞ்ச கருப்புவிடம் சமுத்திரகனியின் அண்ணன் விடுத்துருக்ககூடிய மிரட்டலையோ, அதனால் கஞ்சா கருப்புவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நிர்பந்ததையோ விளக்க தேவைப்படும் பல நூறடி காட்சிகளை, கஞ்ச கருப்புவின் பதற்றம் கலந்த வேகமான நடையிலும், அவர் இறுதுயில் வடிக்கும் ஒரு சொட்டு கண்ணீரிலும் காட்டிய சசி குமார் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்!


[...]

Friday, August 8, 2008

யார் கடவுள்???



சூரியன் சுட்டினும் தண்ணிழல் சாய்ப்பேன்
இருட்சியில் சூழினும் அன்புமழை பொழிவேன்
உதிரம் உதிர்ப்பினும் செந்தேன் சுரப்பேன்
முட்கள் கிழிப்பினும் பூமலர் பூப்பேன்
கல்லாய் பிறப்பினும் கந்தனாய் வாழ்வேன்!


[...]

A grand tribute to Grand Canyon.



கொல்லன் வடித்த வைரணி கலனா?
காலன் அமைத்த பெருநீர்க் கலனா?
நீரில் விளைந்த மலைகளின் தோட்டமா?
தண்ணீர் கரைத்த கடும்பாறை நெஞ்சமா?
கீழே விழுந்து சிதறிய மாதுளையா?
வெடித்து கிளம்பிய பூகம்ப பூவா?
வெண்ணிலா வந்துகாயும் முற்றாத முற்றமா?
ஆதவன் வந்துறங்கும் கல்லறைக் கூடமா?
காற்று சிலுப்பிய பலவண்ணக் கோலமா?
அதுபூசும் வண்ணஅரி தாரமா?


[...]

ஆசை.....










உந்தன் மேடுகளை காண்கையில்,
எந்தன் பள்ளங்களிலோ நீர்வீழ்ச்சி!
அதிலெழுந்த ஆசை அலைகள் என் கீழ்த்தளத்தை மட்டுமின்றி,
மேல்த்தளத்தையும் நனைத்து விட்டது!
இந்த எண்ண வெள்ளத்தில் நான் மூழ்கி விடுமுன்,
என்னுள் வந்து நீ வடிந்து விடுவாயா?
உன்னுள் தான் நீந்த வேண்டினும் உன்னையன்றி,
வேறொன்றையும் சுவாசிக்க எனக்கு மனமில்லை!!


[...]

Wednesday, August 6, 2008

சாரு நிவேதிதாவின் தசாவதாரம் பற்றிய விமர்சனத்திற்கு என் பதில்.

தசாவதாரம் படத்தை பற்றி சாரு நிவேதிதா என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய விமர்சனம் ஒன்றை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்து இருந்தார். அதை படித்த பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு பிரளயத்தின் விளைவே இந்த பகுதி. இந்த பகுதியை படிக்கும் முன் சாரு நிவேதிதாவின் விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - http://charuonline.com/july08/dasavatharam.html

நேர்மையற்ற முறையிலும், அரைவேக்காட்டுத் தனமாகவும், சூழ்ச்சித் திறனுடனும் கையாளப்பட்ட ஒரு கபடதாரியின் எழுத்து இது. தோலைச் சாப்பிட நினைத்தால் துவர்க்கவும், அதனை உரிக்க நினைத்தால் கண்ணிற்கு எரிச்சல் ஏற்படுத்தவும், தோலை உரித்தபின் எதோ சுளை சுளையாக பார்ப்பதற்கு ஒவ்வாமலும் இருக்கும் ஆரஞ்சு பழம் எங்கே; அழகான சிவப்பு நிறத்துடனும், தோலுடனே சாப்பிடகூடியதாகவும் உள்ள ஆப்பிள் எங்கே? - என வினவுவது போன்றுள்ளது சாரு நிவேதிதாவின் தசாவதாரம் படத்தை பற்றிய விமரிசனம்!

தனக்கு தெரிந்த சில விசயங்களையும், தன் சூழ்ச்சித் திறனையும் முதலீடாக கொண்டு, தனி நபர் மீது கொண்ட விரோதப்போக்கை தீர்த்துக்கொள்ளவும், தன்னுடைய எழுத்தை படிக்கும் வாசகனின் புலன்களை சுரண்டவும் பயன்படுத்திக்கொண்ட தன்னலப் போக்கை தவிர இது ஒரு விமரிசனமே அல்ல! கொடுத்த கற்களை வைத்துக்கொண்டு கோபுரமும் எழுப்பலாம், கல்லறையும் கட்டலாம். எழுத்துக் கற்களை வைத்துக் கொண்டு ஒரு படைப்பாளியின் மீதான வெறுப்பின் பால் அவனது படைப்பிற்கு கட்டப்பட்ட விமரிசன கல்லறை இது. எழுத்தாளனின் எழுத்து சிவனிடம் வாங்கிய வரத்தை போன்றது. அதை தவறாகவோ, சுய நலத்திற்காகவோ பயன்படுத்துவது வரம் தந்த சிவனின் தலையிலேயே கைவைப்பது போன்றதாகும்.

கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஏதோ சில வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கடன் பத்திரம் காலாவதியானதை போல் பேசுவது வேடிக்கையாகத்தான் உள்ளது! கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்க்கு பின்னால் ஆண் மற்றும் பெண்ணின் உடல் மற்றும் உளவியல் ரீதியான, வாழ்வியல் மற்றும் சமூக ரீதியான காரணங்கள் உண்டு என்பது கூட அறியாதது போல் பேசுவது வருத்தமளிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் கட்டமைப்பை பற்றி போகிற போக்கில் பேசுவது மிகவும் அபத்தமானதாகும்.

ஒரு பெண்ணின் அனுமதியின்றி காமாதகன் ஒருவன் தனது இச்சையை தீர்ப்பதற்காக கட்டாய உறவு கொள்வதன் மூலம் கற்பை அழிக்க முடியாது. அதனால், "பெண் ஒருத்தி கற்பழிப்பு" - என்ற தலைப்பு செய்தி நிச்சயமாக அர்த்தமற்றது! ஆனால், ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ தன் இச்சையை தணிப்பதற்கு சுயகட்டுப்பாடின்றி கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்ளும் செயலில், கற்பிழப்பு என்ற பேச்சுக்கு கட்டாயம் இடமுண்டு. அதேபோல், ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதிலும் விதிவிலக்கு உண்டு. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சரியான புரிதலின்றி மனம் புரிந்து பின் மன வேறுபாடு காரணமாக பிரிய நேரிடின், அவ்விருவரும் வேறு இருவரை திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. அது "ஒருத்தனக்கு ஒருத்தி" என்ற வாழ்வியல் கட்டமைப்பிற்கு எதிரான செயலும் அல்ல. கமல்ஹாசன் அவர்களும் மேற்கூறிய காரணத்திற்காகத்தான் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார் எனின் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவ்வாறின்றி, பாலியல் பரிசோதனை தான் காரணம் எனின், அது மிகவும் வருத்தத்திற்குரியது.

விரிவான பார்வை, அதிகபட்ச நேசம், அலைவரிசை ஒத்துபோதல் என புகழ்தல் ஒரு புறம், மெய்ப்பித்தல் என்னும் சுவடு அறவேயன்றி ஒருவனின் கலை உருவாக்கத்தையும், கற்பனைக்கு அப்பாற்பட்ட முயற்சியையும் ஒரு பத்தாம் தரமான உருவாக்கத்தோடு பொத்தாம் பொதுவாக ஒப்பிடுவது ஒரு புறம், என காணப்படும் இவரது எழுத்து, முரண்பாடுகளின் சரமே.

கேயாஸ் தியரி பற்றி சிந்திப்பதற்கு பல கமல்ஹாசன்களும் பல சாரு நிவேதிதாக்களும் தமிழ் நாட்டில் நிச்சயம் இருக்கக்கூடும். இங்கே சிந்தனையின் அடுத்த படியான உருவாக்கத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். கேயாஸ் தியரி பற்றி எழுதியவர்க்கு, படத்தின் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காட்சிகளையும், கடைசிக்கட்ட காட்சிகளையும் கொண்டு கேயாஸ் தியரியான பட்டர்பிளை எபெக்டை கமல் விளக்குவதை ஏன் இவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

சர்கஸ், பாம்பு டைப்படிப்பது போன்ற காட்சி அமைப்புகளுடன் ஒரு கலைஞனின் பத்து வேடம் போடும் முயற்சியை ஒப்பிடுவது எவ்வாறு நியாயமாகும்? ஒப்பனையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு பதில், ஒப்பனை போடுவதையே குறை கூறும் இவரது கருத்திலுள்ள வேகம், கடிவாளம் போட்ட ஒரு குதிரையின் வேகமே தவிர, ஒரு ஓட்டப்பந்தய வீரனின் வேகமல்ல! பத்து வேடமிடுவது எவ்வாறு இலக்கியத்திற்கு எதிரான செயலாகும்? ஒரு நடிகன் இத்தனை வேடம் தான் போட வேண்டும் என்ற இலக்கிய நியதியில் நம்பகதன்மையோ, தர்க ரீதியோ சற்றும் இருப்பதாக தெரியவில்லை!

எனது இந்த பகுதியின் முதல் பத்தியில், ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களின் ஒப்பீட்டு உவமானத்தை சொன்னதன் காரணம், ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு முன் வந்த திருவிளையாடலின் தொழில்நுட்பத்தையும் தசாவதாரத்தின் தொழில்நுட்பத்தையும் ஒப்பிடுவதிலுள்ள அவரின் கருத்திலுள்ள பரிமாணத்தின் எண்ணிக்கை ஒன்றை விட அதிகமாக இல்லாததே. ஒருவரது ஒற்றை பரிமாண கருத்துக்கள், ஒரு பொருள் அல்லது ஒரு செயலின் பலவாறான தன்மைகளையும் அதன் மீது காலம் ஏற்படுத்தும் பரிணாமத் தாக்கத்தையும் மறந்து விடும் ஆபத்துமிக்கது. அவரின் அந்த கால மற்றும் இந்த கால படங்களின் ஒற்றை பரிமாண ஒப்பீடும் அவ்வாறே!

இங்கே பன்னிரெண்டாம் நூற்றாண்டு காட்சிகள் பற்றிய அவது கணிப்பிற்கும், குலோத்துங்க சோழன் மற்றும் அக்கால வைணவர்களின் உடர்கட்டமைப்பை பற்றிய அவரது விமர்சனத்திற்கும் எதிரான மாற்று கருத்தொன்றுமில்லை. அனால் திரைகதையில் உள்ள தொய்வை பற்றி தெளிவாக குறிப்பிடாமல், படிக்கும் வாசகனை முட்டாளாக்கும் விதமாக, கதையை நகர்த்த உதவும் படத்தொகுப்பின் உத்திகளில் ஒன்றான jump-cut ஐ கமல் ஏதோ மாபெரும் தவறான முறையில் முட்டாள்த் தனமாக பயன்படுத்தி உள்ளது போல் சித்தரித்திருப்பதை என்னவென்பது? கமலின் narcissism எல்லாம் மனோதத்துவ நிபுணர் ஒருவரின் துணையுடன் இன்னும் விளக்கமாக அலசப்பட வேண்டிய விஷயம்!

கலிபுல்லாவாக வரும் ஏழு அடி கமல் கோமாளித்தனமாக இருந்தது உண்மைதான். ஆனால், கமல் குள்ளமாக நடித்து முடித்து விட்டதால் மட்டுமே இந்த படத்தில் உயரமாக நடித்தார் என்ற அவரது கருதுகோள் எல்லாம் புள்ளியியல் விவரத்துடன் கூடத்தில் நிருபிக்க வேண்டிய ஒன்று. ருக்குமணி பாட்டி பற்றிய அவரது கருத்தும் வெற்று விதண்டாவாதமே.

பூவராகனாக வரும் பாத்திர சித்தரிப்பில் அவர் கண்டுள்ள குறை மிகவும் நகைப்பிற்குரியது. அவரது வனப்பிலோ, வடிவிலோ என்ன குறை கண்டார்? நல்ல திடமாவும், நேர்த்தியான உடையுடனும், குறையில்லாத முகவாட்டத்துடனும் காணும் பூவராகனின் பாத்திர சித்தரிப்பில் இவர் கண்டுள்ள விகாரத்தன்மை விந்தையானது. சரும நிறத்தின் கருமை மட்டுமே பூவராகவன் தோற்றம் பற்றி விகாரமாக தோன்றும் அவரது மனப்பாங்கிற்கு காரணமாக இருக்க முடியுமெனில், அவரது நிறவேற்றுமைக் குணத்தையல்லவா அது வெளிப்படுத்துகிறது? இதே பூவராகவன் சற்றே வெண்ணிறத் தோலுடன் படைக்கபட்டிருப்பின், பாத்திர முரண்பாட்டை பற்றி பக்கம் பக்கமாக அல்லவா எழுதியிருப்பார் இந்த சாரு நிவேதிதா.

தலித் தலைவன் பூவராகவன் உயிர் விடும் காரணம், ஒரு திரைப்படதிலுள்ள சிறிய காட்சியமைப்பே. ஒரு பாத்திரத்திற்கு ஏற்படும் முடிவை ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த கருத்தாக தருவிப்பது ஒரு வித புறச்செருகலே. அதே போல ஊர்ப்பாட்டியின் குடும்ப கட்டுப்பாடு நாடகங்கள் பற்றி பேசும் அளவிற்கு கிராமங்களுக்கு வெளிப்பாடு கொண்ட இவருக்கு இறந்தவரருகே ஒப்பாரி பாடும் பழக்கம் பற்றி ஏன் தெரியவில்லை? இது அவரது மறதி நோயின் வினோத குணம் கூட காரணமாக இருக்கலாம். இல்லையெனில் கபிலன் கண்ணீர் அஞ்சலியாக செலுத்தும் கவிதையை நையாண்டி செய்திருக்க மாட்டார். இவ்வித மறதி நோயின் வினோத குணம் அறிவது எவருக்கு ஆயினும் சற்று சிரமமே. சந்தான பாரதி நடித்த படங்களில், மும்பை எக்ஸ்பிரஸ்ஸோ, மைகேல் மதன காம ராஜனோ, பஞ்சதந்திரமோ நினைவுக்கு வராமல் கரகாட்டகாரன் படம் மட்டும் நினைவுக்கு வந்ததும் மேற்சொன்ன மறதி நோய் கொண்ட ஒருவரின் கருத்துப் புறச்செருகலே.

முஸ்லீம்களை சித்தரித்த விதத்தில் உள்ள முழுமையின்மையை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், கமலின் ஹிந்துத்வா பார்வை பற்றிய அவரது பார்வைக்கு கருத்துக் கூறும் அளவிற்கு எனக்கு ஞானமில்லை. பஞ்சாப் பாடகர் பாத்திரம் பற்றிய அவரது கருத்தும் உண்மையே. ஆனால், பஞ்சாப் பாடகரின் nasal தன்மையை ஆராயும் நுட்பம் கொண்ட சாரு நிவேதிதா, பல்ராம் நாயுடு பழைய தெலுங்கு பாடலிற்கு இடுப்பை அசைக்கும் நுட்பத்தை சொல்லத் தவறியதன் உள்நோக்கம் என்னவோ? நூறு வேடத்தில் நடிப்பதெல்லாம் பெரிதில்லை; முகமூடி இருந்தாலே பின் லாடன் ஆகிவிடலாம் என்றெல்லாம் பேசுவது சிறுபிள்ளைத்தனமானதும், தான்தோன்றித்தனமானதுமான செயலே.

கமலின் "வெள்ளைக்காரனுக்கு பரிசு கொடுக்கும் நிலை வர வேண்டும்" என்கின்ற கனவை, தமிழ்நாட்டிலுள்ள philistine கலாசாரம் பற்றிய தன் அறிவுஜீவி தனமான பேச்சு கொண்டு அழிக்க நினைப்பது, ஒருவன் நற்ற நாற்றை வளர்வதற்கு முன்னே களை எனச் சொல்லி அறுத்தெறிவது போன்றதாகும். பாரதி போன்றோரின் சமுதாய முன்னேற்ற கனவுகளை அக்காலத்திலிருந்த சமுதாய பின்னடைவுகளை சுட்டிக்காட்டி மட்டம் தட்டியிருக்க கூடுவோரின் மட்டகரமான செயலை போன்றது இவரது பேச்சு. பின்னடைவுகள் இருப்பதால் மட்டுமே முன்னேற்றம் பற்றிய கனவுகள் காற்றில் மிதக்கிறது என்ற அடிப்படை உண்மையை கூட அறியாத இவரெல்லாம் எழுதுவதையே நிறுத்துவது நல்லது.

கமல், ரஜினி, ஜெயலலிதா போன்றோர் பற்றிய இவரது அனுமானங்களும் கேள்விக்கூரியதே. "காலாவதியாகிவிட்டது" வார்த்தையின் சாரு நிவேதிதாவின் இரண்டாவது பயன்பாடும் எரிச்சலே ஊட்டுகிறது. ஆத்திக, நாத்திக விவாதமெல்லாம் காலவதியாகிவிட்டது என்று சம நிலை உள்ள எந்த எழுத்தாளனும் சொல்லக் கூடிய கூற்று அல்ல. ஒவ்வொருவர் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலப் பயணத்தில் ஏற்படும் மனப் போராட்டங்களின் முடிவிலா தொடர்ச்சியே ஆத்திக நாத்திக விவாதங்கள். அதனை பற்றிய விவாதமும் சமகாலத்தை சார்ந்ததே.

நேற்று வந்த வசந்த பலன், சிம்பு தேவன், கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் போன்றோருடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு கமலின் தரம் ஒன்றும் குறைந்து விடவில்லை. விதை போட்டதோடு மட்டும் நிறுத்திவிடாமல், தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு, கனிகள் வரும் வரை நிழலாய் பார்த்து பாடுபட்ட ஒரு தோட்டக்காரனை, அதிலிருந்து விழுந்த கனிகளை பொறுக்கி சந்தையில் விற்கும் வியாபாரிகளோடு ஒப்பிடும் மனப் போக்கை என்னவென்பது? செல்வராகவன் மற்றும் அமீரின் திறமைக்கு எதிராக சொல்கிற கூற்று அல்ல இது; கமலுக்கு எதிராக சாரு நிவேதிதா சொன்ன கருத்துக்கெதிரான கூற்றே இது.

மற்றபடி "Babel" மற்றும் "Amores Perros" போன்ற படங்களின் மேற்கோள்கள் சாரு நிவேதிதா தனக்கு தெரிந்த சில விசயங்களை கொண்டு வாசகனை நியாயமற்ற முறையில் ஆட்கொள்ளும் நெம்புநயமே. இத்தகையதான இந்த சாரு நிவேதிதாவின் எழுத்து, நியாயமின்மை, சூழ்ச்சித்திறன், கபடதாரித்தனம், புறச்செறுகல், தர்க்க ரீதியின்மை மற்றும் முரண்பாடுகளின் தொகுப்பே தவிர ஒரு விமரிசனமே அல்ல.

இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் விஷயத்தை தெரிந்து கொள்வதில் உள்ள எளிமையையும், அதே சமயத்தில் அந்த விஷயத்தை பற்றிய தெளிவான, ஆழமான, நியாயமான, சுயநலம் அற்ற, கபடதாரித்தனம் அற்ற பார்வையின் அருமையையும் அறியாது போன்று, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் எழுதுவது மிகவும் வேதனை தரும் விஷயமே!


[...]